நபி மொழிகள்
ஒரு மனிதன் கேள்விப்பட்டதை எல்லாம் பேசுவது அவன் பொய்யன் என்பதை விளக்கப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
ஒரு மனிதன் தான் காணாதததைக் கண்டேன் எனக் கூறுவதுதான் பொய்களிலே மிகப்பெரும் பொய்யாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூல்: முஸ்லீம்
யார் தமது தாடைகளுக்கு இடையே உள்ளதை (நாவை)யும் தமது கால்களுக்கிடையே உள்ளதையும் (சரி வரப் பயன்படுத்துவதாக) பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்
அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் எதில் உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்! உன் வீடு உனக்கு போதுமானதாக ஆகட்டும்! உன் தவறுகளுக்காக அழு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) - நூல்: திர்மிதீ
அல்லாஹ்வின் தூதரே! என்விஷயமாக நீங்கள் மிகவும் அஞ்சுகின்ற விஷயம் எது என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக் காட்டி ''இதைத் தான" என்றார்கள்.
சுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி) - நூல்: திர்மிதீ
கோள் சொல்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
உன் சகோதரனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே! அவ்வாறு அடைந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து உன்னைச் சோதிப்பான்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ(ரலி) - நூல்: திர்மிதீ
நாவைப் பேணுவீர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
ஒரு மனிதன் தான் காணாதததைக் கண்டேன் எனக் கூறுவதுதான் பொய்களிலே மிகப்பெரும் பொய்யாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூல்: முஸ்லீம்
யார் தமது தாடைகளுக்கு இடையே உள்ளதை (நாவை)யும் தமது கால்களுக்கிடையே உள்ளதையும் (சரி வரப் பயன்படுத்துவதாக) பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்
அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் எதில் உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்! உன் வீடு உனக்கு போதுமானதாக ஆகட்டும்! உன் தவறுகளுக்காக அழு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) - நூல்: திர்மிதீ
அல்லாஹ்வின் தூதரே! என்விஷயமாக நீங்கள் மிகவும் அஞ்சுகின்ற விஷயம் எது என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக் காட்டி ''இதைத் தான" என்றார்கள்.
சுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி) - நூல்: திர்மிதீ
கோள் சொல்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்
உன் சகோதரனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே! அவ்வாறு அடைந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து உன்னைச் சோதிப்பான்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ(ரலி) - நூல்: திர்மிதீ
No comments:
Post a Comment